ஜெயலலிதாவின் 2ம் ஆண்டு நினைவுதினம் அதிமுகவினர் அஞ்சலி

காஞ்சிபுரம், டிச.6: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு காஞ்சிபுரத்தில் பல்வேறு இடங்களில் அஞ்சலி கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட அதிமுக  செயலாளர் வாலாஜாபாத் கணேசன் தலைமை தாங்கினார். முன்னாள் முதல்வரும், அஇஅதிமுக பொது செயலாளருமான ஜெயலலிதாவின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு காஞ்சிபுரம் பெரியார் தூண், தேரடி, பேருந்து நிலையம், வாலாஜாபாத் உள்ளிட்ட பல்வேறு  பகுதிகளில் அதிமுகவினர் அவரது உருவப்படத்துக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

 இதில் அதிமுக அமைப்புச் செயலாளர் சோமசுந்தரம், மைதிலி திருநாவுக்கரசு, இளைஞரணி செயலாளர் சோமசுந்தரம், ஒன்றிய செயலாளர் தும்பவனம் ஜீவானந்தம், நகர செயலாளர் ஸ்டாலின், மாணவரணி செயலாளர்  வள்ளிநாயகம், முன்னாள் நகர்மன்றத் தலைவர் சேகர், முன்னாள் ஒன்றியக் குழுத்தலைவர்  தென்னேரி வரதராஜூலு மற்றும் அத்திவாக்கம் ரமேஷ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு  அன்னதானம் வழங்கப்பட்டது.

Related Stories: