காஞ்சிபுரம், டிச.6: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு காஞ்சிபுரத்தில் பல்வேறு இடங்களில் அஞ்சலி கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர் வாலாஜாபாத் கணேசன் தலைமை தாங்கினார். முன்னாள் முதல்வரும், அஇஅதிமுக பொது செயலாளருமான ஜெயலலிதாவின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு காஞ்சிபுரம் பெரியார் தூண், தேரடி, பேருந்து நிலையம், வாலாஜாபாத் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிமுகவினர் அவரது உருவப்படத்துக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.