வாட்ஸ்அப் விபரீதம் பொறியியல் மாணவி தூக்கிட்டு தற்கொலை

காஞ்சிபுரம், டிச.6: காஞ்சிபுரம் அருகே களக்காட்டூரைச் சேர்ந்தவர் பொறியியல் கல்லூரி மாணவி ஜீவா (20). அதே ஊரைச் சேர்ந்தவர் கண்ணன்  என்பவருடன் பழகி வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் ஜீவா சுமார் ஒர்  ஆண்டாக கண்ணனிடம் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கண்ணன் ஜீவா பேசி பழகியபோது எடுத்த படங்களை வாட்ஸ் ஆப் குரூப்பில் பதிவேற்றம் செய்துள்ளார். மேலும் அப்பகுதியில் ஜீவாவை தான்  திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும், ஜீவாதான் என் லைப் பார்ட்னர் என்றும் கூறி வந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஜீவா நேற்று காலை தன்னுடைய வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற மாகரல் போலீசார் ஜீவாவின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவுசெய்து  கண்ணன் என்பவரை தேடி வருகின்றனர். இந்நிலையில் பிரேதப் பரிசோதனை முடிந்து ஜீவா உடலை வீட்டிற்கு கொண்டு செல்லாமல் குடும்பத்தினர் களக்காட்டூரில், காஞ்சிபுரம் - உத்திரமேரூர் சாலையில் மறியல்  போராட்டத்தில் ஈடுபட்டனர். கல்லூரி மாணவி தற்கொலைக்குக் காரணமான கண்ணனை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த மாகரல் போலீசார் இந்த சம்பவத்துக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததை தொடர்ந்து சாலை மறியலைக் கைவிட்டு உடலை வீட்டிற்கு எடுத்து சென்றனர்.

Related Stories: