உத்திரமேரூர் ஜிஹெ.ச்சில் எம்எல்ஏ ஆய்வு

உத்திரமேரூர், டிச.6: உத்திரமேரூர் அரசு பொது மருத்துவமனையில், காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ நேற்றுமுன்தினம் திடீரென ஆய்வு செய்தார். அப்போது, அங்கு சிகிச்சை பெற்று வரும்  உள்நோயாளிகள் மற்றும் சிகிச்சை பெற வந்திருந்த புற நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். மேலும் ரத்த வங்கி, உள்நோயாளி பிரிவு, படுக்கையறையில் வசதிகள் செய்யப்பட்டுள்ளதா எனவும் ஆய்வு செய்தார்.  இதன்பிறகு மருத்துவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.  இந்த ஆய்வின்ேபாது, ஒன்றிய செயலாளர்கள் ஞானசேகரன், குமார், உள்பட பலர் இருந்தனர்.

Related Stories: