திருக்கழுக்குன்றத்தில் எய்ட்ஸ் விழிப்புணர்வு பேரணி

திருக்கழுக்குன்றம், டிச.6:உலக எயிட்ஸ் தினத்தை முன்னிட்டு திருக்கழுக்குன்றம் அன்னை தெரசா கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பில் எய்ட்ஸ் விழிப்புணர்வு பேரணி நடந்தது. திருக்கழுக்குன்றம் பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்ட இப்பேரணியை கல்லூரி தலைவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான வீ.தமிழ்மணி கொடியசைத்து துவக்கி வைத்தார்.      வட்டார மருத்துவ அலுவலர் கவிதா,  கல்லூரி முதல்வர் கமலக்கண்ணன், கல்லூரி ஒருங்கிணைப்பாளர் உதயகுமார், அரிமா சங்க நிர்வாகிகள் சங்கர், தேவ்சந்த், மஹாவீர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்ட இப்பேரணி அடிவார வீதி, சன்னதிதெரு, பஜார்வீதி, மார்க்கெட் வீதி உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக கல்லூரியை சென்றடைந்தது. மாணவ - மாணவிகள் இப்பேரணியின் போது எச்ஐவி,  எய்ட்ஸ் நோய் பற்றிய விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்திச் சென்றனர்.  

Related Stories: