திருக்கழுக்குன்றம், டிச. 6: கல்பாக்கம் அடுத்த புதுப்பட்டினத்தில் “இளைஞர் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு சமூக சேவை” என்ற தொண்டு நிறுவனம் உள்ளது. இந்நிறுவனம் சார்பில் தமிழ்நாடு போலீஸ் மற்றும் ராணுவம், மத்திய தொழில் பாதுகாப்பு படை, எல்லை பாதுகாப்புபடை, கடற்படை, விமானப்படை ஆகியவைகளில் சேர்வதற்கான பயிற்சி மேற்கொள்ளப்படுகிறது. கடந்த 28ம் தேதி சென்னையில் முதலமைச்சரால் காவலர் பணியாணை வழங்கப்பட்டவர்களில் இந்த தொண்டு நிறுவனத்தில் பயிற்சிபெற்ற 12 ஆண்கள் 1 பெண் என 13 பேர் தேர்வு செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. தேர்வு செய்யப்பட்டவர்களுக்கான பாராட்டு விழா புதுப்பட்டினத்திலுள்ள பயிற்சி மையத்தில் நடந்தது. பயிற்சியாளர் அன்சர் தலைமை தாங்கினார். முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் பக்கீர் முகமது, கிங்உசேன், வியாபாரிகள் சங்க தலைவர் காதர் உசேன், அறக்கட்டளை பொறுப்பாளர் சாபிராஅன்சர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் எம்எல்ஏ தனபால், மத்திய காவல் படை அதிகாரி வினோத் ஆகியோர் காவல் துறையில் தேர்வான 13 பேரையும் பாராட்டி பரிசுகள் வழங்கி பேசினர். இதில் பேராசிரியர் குமார், மற்றும் எட்டியப்பன், துரைராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.