அறந்தாங்கி, டிச.5: கஜா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் சிரமத்தை குறைக்கும் வகையில், கடந்த ஆண்டிற்கு வழங்க வேண்டிய பயிர்காப்பீட்டு இழப்பீட்டு தொகை உடனே வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். புயல், வெள்ளம், வறட்சி போன்ற இயற்கை காரணிகள், பூச்சி தாக்குதல் போன்ற இடையூறுகளால் விவசாயிகள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் பயிர் காப்பீட்டு திட்டம் தொடங்கப் பட்டது.பயிர்காப்பீடு செய்த விவசாயிகளுக்கு வறட்சியால் பயிர்கள் பாதிக்கப்பட்டபோது, உரிய இழப்பீடு கிடைத்தது. இதனால் விவசாயிகள் சாகுபடியை தொடங்கிய உடனே பயிர்காப்பீடும் செய்து விடுகின்றனர்.இந்த நிலையில் அரசு துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வந்த பயிர்காப்பீட்டு திட்டத்தை, தற்போதைய மத்திய அரசு சில மாறுதல்களை செய்து, தேசிய பயிர்காப்பீட்டு திட்டம் என்ற பெயரில், அதை செயல்படுத்தும் அமைப்பாக காப்பீட்டு நிறுவனங்களை நியமித்தது.அதன்படி கடந்த 2016ம் ஆண்டு வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு இழப்பீட்டு தொகை வழங்கப்பட்டது. ஆனால் கடந்த ஆண்டு அறந்தாங்கி உள்ளிட்ட பகுதிகளில் விவசாயம் பாதிக்கப்பட்டபோதிலும், இன்னும் பயிர் காப்பீட்டு இழப்பீட்டு தொகை வழங்கப்படவில்லை. கஜா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் தற்போது, சாப்பாட்டிற்கும்,மருத்துவம், கல்வி உள்ளிட்ட அடிப்படை தேவைகளுக்கும், இந்த வருடம் சாகுபடியின்போது, உரம், ச்சிக்கொல்லி மருந்து வாங்குவதற்கும் பணம் இல்லாமல் அல்லாடி வருகின்றனர் இதுகுறித்து திட்டகுடியைச் சேர்ந்த விவசாயி முத்துராமன் கூறியதாவது: