பொன்னமராவதி,டிச.5: பொன்னமராவதி வட்டார வளமையத்தில் உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா நடந்தது. பொன்னமராவதி ஒன்றிய வட்டாரக்கல்வி அலுவலர்கள் ராமதிலகம் , பால்டேவிட்ரொசாரியோ ஆகியோர் தலைமை வகித்தனர். பொன்னமராவதி வட்டார வளமைய மேற்பார்வையாளர் செல்வக்குமார் முன்னிலை வகித்தார். விழாவினை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வீரப்பன் தொடங்கி வைத்து பேசினார். 1 முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு வளைப்பந்து, உருளை சேகரித்தல் உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. பின்னர் மரக்கன்று நடும்விழா, கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அனைத்து மாற்றுத்திறன் மாணவர்களுக்கும் பரிசுகளும், பாராட்டுச்சான்றிதழும் வழங்கப்பட்டது.