கறம்பக்குடி, டிச. 5 : புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே அம்புக்கோவில் கிராமம் அமைந்துள்ளது இக்கிராமத்தில் பக்தலலி–்தேஸ்வரர் சிவன் கோயில் மற்றும் அதன் அருகே வீரமாகாளியம்மன் கோயில் அருகே அமைந்துள்ளது. இந்த இரண்டு கோயில்களும் புதுக்கோட்டை தேவஸ்தான இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வருகிறது. வீரமாகாளியம்மன் கோயில் மண்டபத்தின் உள் முகப்பில் பெரிய உண்டியல் அமைந்துள்ளது. வழக்கம் போல் நேற்று விடியற்காலையில் கோயில் காவலாளி கோயிலை திறந்து பார்த்த போது கோயில் உண்டியல் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். பின்னர் கோயில் காவலாளி குருக்களுக்கு தகவல் கொடுத்தார் .உடனடியாக அவர் புதுக்கோட்டை தேவஸ்தான செயல் அலுவலர் , கோயில் மணியார் மற்றும் கறம்பக்குடி காவல் துறைக்கு தகவல் தெரிவித்தார். பின்னர் புதுக்கோட்டையில் இருந்து கை ரேகை நிபுணர் மற்றும் தேவஸ்தான அலுவலர்கள் கறம்பக்குடி காவல் துறையினர் கோயிலை பார்வையிட்டு ஆய்வு செய்து கை ரேகையை பதிவு செய்தனர். பூட்டை உடைத்து அதில் இருந்த உண்டியல் காணிக்கை பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.