ஊட்டி, டிச. 4: பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழிக்க வலியுறுத்தி பள்ளி மாணவ, மாணவிகளின் விழிப்புணர்வு பேரணி ஊட்டியில் நேற்று நடந்தது.
நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் முற்றிலும் தடை ெசய்யப்பட்டுள்ளது. கடந்த பல ஆண்டுகளுக்கு முன்னதாகவே நீலகிரி மாவட்டத்தின் சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை அழகைற பாதுகாக்கும் நோக்கில் நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் கேரி பேக்குகள், டம்ளர்கள் மற்றும் தட்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், வரும் ஜனவரி மாதம் 1ம் தேதி முதல் 19 வகையான பிளாஸ்டிக்குகளுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது.
தமிழகம் முழுவதும் இந்த உத்தரவு வரும் நிலையில், தற்போது பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தாமல் இருக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.
நேற்று ஊட்டியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது. மத்திய பஸ் நிலையத்தில் துவங்கிய பேரணி சேரிங்கிராஸ் வரை நடந்தது. பேரணியில் ஏராளமான பள்ளி மாணவர்கள் மற்றும் பல்வேறு அமைப்புக்களை சேர்ந்வர்கள் கலந்துக் ெகாண்டனர். பேரணியின் போது, பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டது. மேலும், பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. முன்னதாக நடந்த துவக்க நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா, எஸ்பி., சண்முகப்பிரியா உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.