கீரைச் சாறுகளும் பயன்களும்

நன்றி குங்குமம் டாக்டர்

*முருங்கை கீரையுடன் சிறிது கருப்பு எள், சீரகம், மிளகு, உப்பு சேர்த்து நீர்விட்டு கொதிக்கவிட்டு வெந்தவுடன் இறக்கி வடிகட்டி அருந்திட, ரத்த அழுத்தம் சீராகும். ரத்த சோகை குணமாகும்.

*பசலைக்கீரையுடன் சின்ன வெங்காயம், பூண்டு, மிளகு, பச்சைமிளகாய். உப்பு சேர்த்து வேக வைத்து அருந்த, உடலிலுள்ள அதிகப்படியான கொழுப்பு கரையும், தைராய்டு நோய் குணமாகும்.

*வல்லாரைக்கீரை, பயத்தம்பருப்பு, மிளகு, உப்பு சேர்த்து கொதிக்கவிட்டு அருந்த ஞாபகசக்தி அதிகமாவதுடன்  தோல் நோய்கள் குணமாகும்.

*முடக்கத்தான் கீரை, சின்ன வெங்காயம், சுக்குப்பொடி சீரகத்தூள், உப்பு சேர்த்து நீர்விட்டு கொதிக்கவிட்டு, பின் வடிகட்டி அருந்த முதுகுத்தண்டுவலி வாதநோய், பக்கவாதம் முதலிய நோய்க்கு நிவாரணம் கிடைக்கும்.

*முள்ளங்கிக் கீரையை அப்படியே வேக வைத்து சூப்பாகவோ, சாறாகவோ அருந்த  சிறுநீரகக் கற்கள் கரையும். வாயுவை அகற்றி மலச்சிக்கலை போக்கும்.

*சிறுகீரையோடு ஒரு பிடி பார்லி, சீரகம் ஒரு தேக்கரண்டி, மிளகு ஒரு தேக்கரண்டி சேர்த்து நீர்விட்டு கொதித்ததும் உப்பு சேர்த்து இறக்கி வடிகட்டி வெண்ணெய் சேர்த்து அருந்த உடல் பருமன் குறையும் . பித்த நோய்கள் அகலும்.

*பருப்புப் கீரையுடன்  ஊற வைத்த வெந்தயம் போட்டு வெங்காயம், பூண்டு சேர்த்து வேகவிட்டு வடிகட்டி சீரகத்தூள் மிளகுத்தூள், உப்பு சேர்த்து அருந்த பித்தம் தணியும். நீர்க்கடுப்பு, நீர்ச்சுருக்கு, எரிச்சல் குணமாகும்.

*தூதுவளைக் கீரையுடன் சீரகம், பூண்டு, வேப்பந்தளிர் சிறிது சேர்த்து நீர்விட்டு கொதித்ததும் வடிகட்டி அருந்தி வர, வயிற்றுப் பூச்சிகள் அழியும். ரத்தத்தை தூய்மையாக்கி, நெஞ்சகப் பிரச்னைகள், சுவாசக் கோளாறுகளைப் போக்கும்.

*கரிசலாங்கண்ணியை வேக வைத்து அருந்த, ஆரம்பநிலை புற்றுக் கட்டிகள் சரியாகும். முடியின் வேர்க்கால்களுக்கு பலம் அளித்து, முடி வளர்ச்சிக்கு உதவும்.

*கொடிப் பசலைக் கீரையை வேகவிட்டு வடிகட்டி சிறிது கற்கண்டு சேர்த்து அருந்தி வர உடல் சூடு தணியும்.

*துத்திக்கீரையுடன் கடுக்காயைத் தட்டி போட்டு, நீர்விட்டு உப்பு போட்டு கொதித்ததும் அருந்த வெள்ளைப்படுதல் குணமாகும்.

*மணத்தக்காளி கீரையை சாறாக அருந்த வயிற்றுப்புண்ணை ஆற்றும். உடல் எடை குறைவதோடு, தொப்பையைக் குறைக்கும்.

*நச்சக் கொட்டை கீரை, மிளகு, சீரகம், உப்பு, பூண்டு, தக்காளி, வெங்காயம் போட்டு நீர்விட்டு கொதிக்கவைத்து வடிகட்டி அருந்தி வர கழுத்துவலி குணமாகும். குடற்புண்கள் ஆறும்.

தொகுப்பு : மகாலட்சுமி சுப்ரமணியன்

Related Stories: