வினாடி வினா போட்டி மாநில அளவில் முதல் இடம் பிடித்த ஐடியல் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு

கூடலூர், நவ.30: வினாடி வினா போட்டியில் மாநில அளவில் முதல் இடம் பிடித்த கூடலுார் ஐடியல் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.   கோவை கருமத்தம்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் மாநில அளவிலான வினாடி வினா போட்டி நடந்தது. இதில் கூடலூர் ஐடியல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் ஜாய்தாமஸ், முகமது அர்சாத், மாணவி ஹகசானா ஆகியோர் சூப்பர் சீனியர் பிரிவு போட்டியில் பங்கேற்றனர்.  இதில் கலந்து கொண்ட 9 பள்ளிகளில் கூடலூர் ஐடியல் பள்ளி மாணவர்கள் மாநில அளவில் முதலிடம் பெற்றனர். கடந்த 25 ஆண்டுகளில் நீலகிரி மாவட்டத்தில் இருந்து போட்டிகளில் கலந்து கொண்டுவந்த நிலையில் முதல் முறையாக இப்பள்ளி மாணவ மாணவிகள் மாநில அளவில் முதல் இடம் பிடித்தனர்.    வெற்றி பெற்ற மாணவ மாணவிகளை பள்ளி தாளாளர் சுலைமான், பயிற்சி ஆசிரியர்கள் சினி மற்றும் சுகன்யா ஆகியோர் பாராட்டினர்

Related Stories: