கண்ணமங்கலம், நவ.30: கண்ணமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயப்பிரகாஷ், சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜா, நந்தகுமார், ராஜேந்திரன் ஆகியோர் கண்ணமங்கலம் படவேடு சாலையில் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கொளத்தூர் குளக்கரையில் சந்தேகப்படும்படி அமர்ந்திருந்த அமிர்தியை சேர்ந்த சுப்பிரமணி(38), இருளம்பாறை செல்வம்(27), வெங்கடேசன்(20), சூரியா(20) மற்றும் 17 வயதுடைய ஒருவர் என 5 பேரை பிடித்தனர்.