செம்மரம் வெட்ட செல்ல முயன்ற 5 பேர் கைது ₹3.62 லட்சம், 2 பைக், வெட்டுகத்தி பறிமுதல்

கண்ணமங்கலம், நவ.30: கண்ணமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயப்பிரகாஷ், சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜா, நந்தகுமார், ராஜேந்திரன் ஆகியோர் கண்ணமங்கலம் படவேடு சாலையில் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கொளத்தூர் குளக்கரையில் சந்தேகப்படும்படி அமர்ந்திருந்த அமிர்தியை சேர்ந்த சுப்பிரமணி(38), இருளம்பாறை  செல்வம்(27), வெங்கடேசன்(20), சூரியா(20) மற்றும் 17 வயதுடைய ஒருவர் என 5 பேரை பிடித்தனர்.

விசாரணையில் அவர்கள் ஆந்திராவிற்கு செம்மரம் வெட்ட செல்ல இருந்தது தெரிந்தது. இதையடுத்து அவர்களிடம் இருந்த ₹3.62 லட்சம், 2 பைக், 2 வெட்டுகத்தி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர், அவர்கள் மீது வழக்குப்பதிந்து ஆரணி கோர்ட்டில் ஆஜர்படுத்தி வேலூர் சிறையில் அடைத்தனர்.

Related Stories: