திருவண்ணாமலை, அக்.31: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ₹93 லட்சத்தை பக்தர்கள் உண்டியலில் காணிக்கையாக செலுத்தி உள்ளனர். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். அண்ணாமலையாரை தரிசனம் செய்துவிட்டு கிரிவலம் வரும் பக்தர்கள் கோயில் வளாகம் மற்றும் கிரிவலப்பாதையில் உள்ள உண்டியல்களில் காணிக்கை செலுத்திவிட்டு செல்வது வழக்கம். இவ்வாறு பக்தர்கள் செலுத்தும் உண்டியல் காணிக்கை பவுர்ணமி முடிந்த பின்னர் எண்ணப்படுவது வழக்கம்.