அரியலூர், நவ,29: அரியலூர் மாவட்டம், வெங்கனூரில் எஸ்ஐ மணிகண்டன், போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே வந்த மினி ஆட்டோவை மறித்து சோதனை செய்த போது டிரைவர் தப்பி ஓடி விட்டார். அதன்பின் போலீசார் அவ்வண்டியை சோதனை செய்த போது மினி ஆட்டோவில் டிரைவர் ஜெகன்ராஜ் மணல் கடத்தி வந்திருப்பது தெரியவந்தது. இதனையடுத்து வெங்கனூர் போலீசார் வைத்தியநாதபுரத்தை சேர்ந்த செல்லப்பன் மகன் ஜெகன்ராஜ் என்பவர் மீது வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.