அரியலூரில் லாரியில் திடீர் தீ

அரியலூர்,நவ.27: அரியலூர் தனியார் சிமெண்ட் ஆலையிலிருந்து  சிமெண்ட் அரைக்கும் மூலப்பொருளான கிளிங்கரை ஏற்றிக்கொண்டு வாளாப்பாடிக்கு அரியலூர் வழியாக ஒரு லாரி வந்து கொண்டிருந்தது. அப்போது  லாரியின் பின்பக்கத்தில் இருந்து புகை வந்துள்ளது. இதனையடுத்து  டிரைவர் வண்டியை நிறுத்தி பார்த்தார். லாரியில் ஏற்றியிருந்து கிளிங்கர் சூடாக இருந்ததால் அதிலிருந்து கணிந்து புகையாக வெளியே வந்துள்ளது. இதனையடுத்து அரியலூர் தீயணைப்பு துறையினர் வந்து  பொக்லைன் மூலம் லாரியிலிருந்த கிளிங்கரை கீழே இறக்கி தண்ணீர் விட்டு அணைத்தனர். இச்சம்பவத்தால் சிறிது நேரம் பரப்பபரப்புடன் காணப்பட்டது.

Related Stories: