மது விற்ற பெண் கைது

அரியலூர்,நவ.27: அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வினோத்கண்ணன் மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கோவிந்தபுத்தூர் தெற்கு தெருவை சேர்ந்த ராதாகிருஷ்ணன் மனைவி விஜயா(50) என்பவர் தனது பெட்டிக்கடை பின்புறம் மதுபாட்டில்களை பதுக்கி விற்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்கு பதிந்து விஜயாவை கைது செய்து அவரிடம் இருந்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Related Stories: