அரியலூர் மாவட்ட குரூப் 2 நேரடி நியமன அலுவலர்கள் சங்க ஆலோசனை கூட்டம்

அரியலூர்,நவ,27: அரியலூர் மாவட்ட குரூப்2 நேரடி நியமன அலுவலர்கள் சங்க ஆலோசனை கூட்டம் அரியலூரில் நடந்தது. அரியலூரில் தனியார் ஓட்டலில் மாவட்ட வருவாய்த்துறை குரூப்2 நேரடி நியமன அலுவலர்கள் சங்க ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.  கூட்டத்திற்கு கனகராஜ் வரவேற்புரையாற்றினார். மாநில தலைவர் சையது அபுதாஹிர், மாநில பொதுச்செயலாளர்  தர்மராஜ், முன்னாள் மாநில துணை தலைவரும் துணை கலெக்டருமான முனியப்பன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.  அரியலூர் மாவட்ட வட்டாட்சியர்கள் முத்துக்கிருஷ்ணன்,  கலைவாணன், துரை உள்ளிட்ட வட்டாட்சியர்களும், துணை வட்டாட்சியர்களும், முதுநிலை வருவாய் ஆய்வாளர்களும் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர். இந்நிகழ்ச்சியில் அரியலூர் மாவட்டத்தில் பணிபுரியும் அனைத்து நேரடி நியமன அலுவலர்களையும் சந்தித்து உறுப்பினர் சந்தா வசூல் செய்வது, நேரடி நியமன அலுவலர்கள் சங்கத்தின் மாவட்ட மையத்தினை எழுச்சியாக நடத்திடுவது, உறுப்பினர் சேர்க்கை முடிவுற்றதும் மாவட்ட பொதுக்குழுவை நடத்தி இதர மாவட்ட நிர்வாகிகளை தேர்வு செய்வது ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் புதிய பொறுப்பாளர்களாக மாவட்ட தலைவராக  கனகராஜ், மாவட்ட செயலாளராக குருநாதன், மாவட்ட பொருளாளராக  மஞ்சுளா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

Related Stories: