ஜாக்டோ -ஜியோ ஒருங்கிணைப்புகுழு கூட்டம்

அரியலூர், நவ.27: அரியலூரில் ஜேக்டோ ஜியோ ஒருங்கிணைப்பு குழு கூட்டம் அரசு உயர் நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்தது. தமிழக ஆசிரியர் கூட்டணி மாநில தலைவர் நம்பிராஜ் தலைமை வகித்தார். கூட்டத்தில் வருகிற டிசம்பர் 4ம்தேதி முதல் 7 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி தொடர் வேலைநிறுத்த போராட்டம் செய்வது. வருகிற நவம்பர் 30ம்தேதி மாலை அரியலூர் அண்ணா சிலை அருகில் 7அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்வது என முடிவெடுக்கப்பட்டது. கூட்டத்தில், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம் மாநில தலைவர் மகேந்திரன், தமிழ்நாடு பதவி உயர்வுபெற்ற முதுநிலை ஆசிரியர் சங்கம் செல்வராஜ் உள்பட ஆசிரியர் சங்கத்தின் சார்பாக பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: