கரூர் நகராட்சியில் பயன்பாடின்றி கிடக்கும் சிறு மின்விசை தொட்டி நடவடிக்கை எடுக்க கோரிக்கை

கரூர், நவ. 21: கரூர் நகராட்சிக்குட்பட்ட பாரதிதாசன் தெரு பகுதியில் பயன்பாடின்றி இருக்கும் சின்டெக்ஸ் டேங்க்கினை பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 கரூர் நகராட்சிக்குட்பட்ட பாரதிதாசன் தெருவில் இருந்து மாவட்ட விளையாட்டு மைதானம் செல்லும் சாலையில் இந்த பகுதி மக்களின் பயன்பாட்டிற்காக குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு பயன்பாட்டில் இருந்து வந்தது.

இந்நிலையில், கடந்த சில வாரங்களாக, பல்வேறு காரணங்களால் டேங்க் பயன்பாடின்றி உள்ளது. இதனால், உபரி தண்ணீர் பயன்பாட்டிற்காக இந்த பகுதியினர் கடுமையாக அவதிப்பட்டு வருகின்றனர். இது குறித்து அதிகாரிகளிடமும் மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.  எனவே, அதிகாரிகள் இந்த டேங்க்கினை பார்வையிட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: