பெரம்பலூர், நவ. 16: பெரம்பலூரில் எளம்பலூர் சாலையில் உள்ள பாலமுருகன் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் கந்தசஷ்டி விழா நடைபெறும். அதேபோல் கந்தசஷ்டி விழா நடந்தது. இதையொட்டி சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. பின்னர் சுவாமிக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. கந்தசஷ்டி விழாவில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.