செந்துறை, நவ. 15: செந்துறை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க வளாகத்தில் 65வது அகில இந்திய கூட்டுறவு சங்க வாரவிழா நடந்தது. கொடியை ஏற்றி வைத்து சங்க தலைவர் கொளஞ்சிநாதன் பேசுகையில், 2017-18ம் ஆண்டு பயிர்க்கடன் ரூ.2.31 கோடி வழங்கப்பட்டுள்ளது. இந்தாண்டு பயிர்கடன் மற்றும் பிற்படுத்தப்பட்ட பொருளாதார மேம்பாட்டு திட்டத்தின்கீழ் சிறு குறு விவசாயிகளுக்கு நீர்ப்பாசன வசதி தொழில்களுக்கு கடனுதவி, சுயஉதவி குழுக்களுக்கு கடனுதவி மானியத்துடன் வழங்கப்படும் என்றார். சங்க செயலாளர் கலியபெருமாள், சங்க நிர்வாகக்குழு இயக்குனர்கள் நல்லதம்பி, ராஜேந்திரன், பழனிவேல், ரேவதி குமரவேல், செல்வம் நீலாவதி, முருகன், செல்வராசு, ராஜதுரை, காமராஜ் அங்கன்வாடி பணியாளர்கள் பாஸ்கர், கயல்விழி பூராசாமி, அருள், சங்கர் துணை செயலாளர்கள் ஞானபிரகாசம், குமார் மற்றும் பலர் பங்கேற்றனர்.