ஆண்டிமடத்தில் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர்

ஜெயங்கொண்டம். நவ.15: தமிழ்நாட்டில் பொதுமக்களை பெரிதும் அச்சுறுத்தும் வகையில் டெங்கு, மலேரியா, பன்றிகாய்ச்சல் போன்ற மனித உயிர்களைக் குடிக்கும் கொடிய நோயிலிருந்து பொதுமக்களை காக்கும் வகையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்  அறிவுறுத்தலுக்கு இணங்க ஆண்டிமடம் ஒன்றிய திமுக சார்பில் ஆண்டிமடம் கடைவீதியில் பொதுமக்கள், மற்றும் பள்ளி மாணவ,மாணவிகளுக்கு மாவட்ட செயலாளர் சிவசங்கர் நிலவேம்பு குடிநீர் வழங்கினார். நிகழ்ச்சியில் ஒன்றிய பொறுப்பாளர்கள் தருமதுரை, முருகன், மாவட்ட மருத்துவ அணி துணை அமைப்பாளர் சேவியர் சஞ்சீவிகுமார், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் அழகர், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்   லூயிகதிரவன், மாவட்ட விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் அறிவழகன் மற்றும்  மாவட்ட, ஒன்றிய. நகர நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Related Stories: