கொள்ளிடம், நவ.15: கொள்ளிடம் அருகே 4 ஆண்டுகளாக பாசன வாய்க்கால் தூர்வாரப்படாததால் தண்ணிரீன்றி பயிர் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.
நாகை மாவட்டம், கொள்ளிடம் அருகே கொன்னக்காட்டுபடுகை கிராமத்தில் பிரதான தெற்குராஜன் வாய்க்காலிலிருந்து பாசன கிளை வாய்க்கால் பிரிந்து கொன்னக்காட்டுபடுகை, கன்னாங்குளம், சாமியம், மேலவல்லம் ஆகிய கிராமங்களில் உள்ள சுமார் 1200 ஏக்கர் விளை நிலங்களுக்கு முக்கிய பாசன வாய்க்காலகவும், வடிகால் வாய்க்காலகவும், இருந்து வருகிறது. இப்பகுதியின் விவசாயிகள் பெரும்பாலோனர் இந்த வாய்க்கால் பாசனத்தை நம்பியே பயிர் சாகுபடி செய்து வருகின்றனர். கடந்த 4 ஆண்டுகளாக இந்த வாய்க்கால் வெட்டப்படாமலும், தூர்வாரப்படாமலும் கண்டு கொள்ளாமல் விடப்பட்டதால் வாய்க்கால் குறுகியும், புதர் மண்டியும் வாய்க்கால் முழுவதும் செடி கொடிகள், புதர்கள் மூடியுள்ளன. இதனால் பாசனத்திற்கு உரிய தண்ணீர் வயல்களுக்கு சென்று சேரவில்லை. போதிய தண்ணீர் சென்று சேராததால் சம்பா நெற்பயிர் கருகும் நிலையில் உள்ளது.