கொடைக்கானல், நவ. 15:கொடைக்கானல் ஏரி அருகே முள்வேலியில் சிக்கிய பறக்கும் அணிலை வனத்துறையினர் உயிருடன் மீட்டனர். கொடைக்கானல் ஏரி அருகே டிவிஎஸ் பங்களா உள்ளது. இந்த பங்களாவின் பாதுகாப்பு முள்வேலியில் பறவை அணில் எதிர்பாராத விதமாக சிக்கியது. முள்வேலியில் சிக்கிய பறக்கும் அணில் உயிருக்கு போராடியது. அப்போது அந்த பகுதியைக் கடந்து சென்ற கால்டன் ஹோட்டலில் பணிபுரியும் பாண்டி இதை பார்த்துள்ளார். உடனே ஸ்மைல் அசோசியேசன் நண்பர்களுக்கு தகவல் தெரிவித்தார். இந்த அமைப்பின் தலைவர் ரவி மற்றும் அப்பாஸ் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.