முன்னாள் பிரதமர் நேரு பிறந்தநாள்

திண்டுக்கல், நவ. 15:முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேருவின் 130வது பிறந்தநாளை முன்னிட்டு திண்டுக்கல்லில் உள்ள அவரது சிலைக்கு திண்டுக்கல் மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் சொக்கலிங்கம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.

நிகழ்ச்சியில் துணைத்தலைவர் அரபு முகமது, சிறுபான்மை துறை மாநகர மாவட்ட தலைவர் காஜாமைதீன், முன்னாள் மாவட்ட பொறுப்பாளர் வின்சென்ட், இளைஞர் காங்கிரஸ் மாநகர மாவட்ட பொதுச் செயலாளர் ராஜா, செய்தி தொடர்பாளர் முகமது அலியார் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து ஜவர்கலால் நேருவின் பிறந்த நாளை, குழந்தைகள் தின விழாவாக பள்ளிகளில் கொண்டாடப்பட்டு வருகின்றன. இந்நிலையில் திண்டுக்கல் நாகல்நகரில் உள்ள கென்னடி மெட்ரிக் பள்ளியில், தேசிய ஒருமைப்பாடு இயக்க மாநில தலைவர் அப்துல் ஜப்பார், நேருவின் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தி பின்னர் பள்ளி குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கினார்.

இதில் காந்தி மன்ற தலைவர் மருது, விவசாய சங்க தலைவர் நிக்கோலாஸ், தேசிய ஒருமைப்பாடு இயக்க பொதுச்செயலாளர் ஜக்கரியா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள காமாட்சி பண்டரிநாதன் அறக்கட்டளை சார்பில் ஸ்ரீமதி கார்த்திகேயனி சிறப்பு குழந்தைகள் பள்ளியில் குழந்தைகள் தினவிழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் அறக்கட்டளை நிறுவனர் பால்ராஜ் வரவேற்றார். பள்ளியில் உள்ள குழந்தைகளுக்கு ஓட்டப்பந்தயம், பலுன் உடைத்தல், சாப்பாடு போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற  குழந்தைகளுக்கு,  பரிசு வழங்கினார்.

Related Stories: