திண்டுக்கல், நவ. 15:முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேருவின் 130வது பிறந்தநாளை முன்னிட்டு திண்டுக்கல்லில் உள்ள அவரது சிலைக்கு திண்டுக்கல் மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் சொக்கலிங்கம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.
நிகழ்ச்சியில் துணைத்தலைவர் அரபு முகமது, சிறுபான்மை துறை மாநகர மாவட்ட தலைவர் காஜாமைதீன், முன்னாள் மாவட்ட பொறுப்பாளர் வின்சென்ட், இளைஞர் காங்கிரஸ் மாநகர மாவட்ட பொதுச் செயலாளர் ராஜா, செய்தி தொடர்பாளர் முகமது அலியார் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து ஜவர்கலால் நேருவின் பிறந்த நாளை, குழந்தைகள் தின விழாவாக பள்ளிகளில் கொண்டாடப்பட்டு வருகின்றன. இந்நிலையில் திண்டுக்கல் நாகல்நகரில் உள்ள கென்னடி மெட்ரிக் பள்ளியில், தேசிய ஒருமைப்பாடு இயக்க மாநில தலைவர் அப்துல் ஜப்பார், நேருவின் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தி பின்னர் பள்ளி குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கினார்.