திண்டுக்கல் நீதிமன்றத்தில் புல்லட் நாகராஜன் ஆஜர்

திண்டுக்கல், நவ. 15:ளளளவழிப்பறி செய்த வழக்கு தொடர்பாக புல்லட் நாகராஜன் திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். தேனி மாவட்டம், பெரியகுளத்தை சேர்ந்தவர் புல்லட் நாகராஜன் என்ற நாகராஜ் (51). இவர் மீது திண்டுக்கல், தேனி, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வழிப்பறி மற்றும் திருட்டு வழக்குகள் உள்ளன.இந்நிலையில் திண்டுக்கல் நகரில் கடந்த 2012ம் ஆண்டு கத்தியை காட்டி வழிப்பறி செய்த வழக்கு மேற்கு போலீஸ் நிலையத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கு திண்டுக்கல் நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது. இந்த விசாரணைக்கு புல்லட் நாகராஜ் நேற்று திண்டுக்கல் ஜே.எம்-1 நீதிமன்றத்தில் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி முருகன், வரும் 28ம் தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்தார்.

Related Stories: