ஒட்டன்சத்திரம் நகராட்சியில் செயல்படாத இ-சேவை மையத்தை திறக்க வேண்டும் பொது மக்கள் கோரிக்கை

ஒட்டன்சத்திரம், நவ. 15:    ஒட்டன்சத்திரம் நகராட்சி பகுதியில் இயங்கி வந்த சேவை மையம் செயல்படாததால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர். சேவை மையத்தை உடனடியாக திறக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஒட்டன்சத்திரம் நகராட்சியில் செயல்பட்டு வந்த இ-சேவை மையத்தில், ரேஷன் கார்டு, ஆதார் அட்டை, சாதிச்சான்றிதழ், வருமானச் சான்றிதழ், வில்லங்கச் சான்றிதழ், பட்டா, சிட்டா உள்ளிட்ட சேவைகளை ஒட்டன்சத்திரம் நகராட்சி மற்றும் சுற்றியுள்ள ஊர் பொதுமக்கள் பெற்றுவந்தனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக இச்சேவை மையம் செயல்படாத நிலையில் உள்ளதால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகினர்.

இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘இப்பணியில் இருந்த ஊழியர் வேறு வேலைக்கு சென்றுவிட்டதால் மாற்று ஊழியர் நியமிக்கும் வரை சேவை மையம் செயல்படாது என்று தெரிவித்துள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பணியாளர் நியமித்து இ-சேவை மையம் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: