காஞ்சிபுரம், நவ.15:காஞ்சிபுரம் மாவட்டத்தில், 65வது அனைந்திந்திய கூட்டுறவு வாரவிழா நவ.14ம் தேதி தொடங்கி நவ.20ம் தேதிவரை ஏழு நாட்கள் சிறப்புடன் நடைபெற உள்ளது. இவ்விழாவின் துவக்க நாள் நிகழ்ச்சி காஞ்சிபுரம் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இந்த துவக்க நாள் நிகழ்ச்சியில் மண்டல இணைப்பதிவாளர் சந்திரசேகரன், தலைமை தாங்கி கூட்டுறவுக் கொடியினை ஏற்றி வைத்தார்.