65வது கூட்டுறவு வாரவிழா

காஞ்சிபுரம், நவ.15:காஞ்சிபுரம் மாவட்டத்தில், 65வது அனைந்திந்திய கூட்டுறவு வாரவிழா நவ.14ம் தேதி தொடங்கி நவ.20ம் தேதிவரை ஏழு நாட்கள் சிறப்புடன் நடைபெற உள்ளது. இவ்விழாவின் துவக்க நாள் நிகழ்ச்சி காஞ்சிபுரம் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இந்த துவக்க நாள் நிகழ்ச்சியில் மண்டல இணைப்பதிவாளர் சந்திரசேகரன், தலைமை தாங்கி கூட்டுறவுக் கொடியினை ஏற்றி வைத்தார்.  

மேலும், இணைப்பதிவாளர் அலுவலக வளாகத்தில் மரக் கன்றுகள் நடப்பட்டது. இவ்விழாவில், இணைப்பதிவாளர் அலுவலக துணைப்பதிவாளர் சங்கர், சரக துணைப்பதிவாளர்கள், வேணு, சிவக்குமார், கண்ணன் மற்றும் உமாபதி, கூட்டுறவு சார்பதிவாளர்கள், முதுநிலை ஆய்வாளர்கள், கூட்டுறவுத்துறை அலுவலர்கள் மற்றும் சங்கப் பணியாளர்கள், கூட்டுறவு பட்டயப் பயிற்சி மாணவ, மாணவியர்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: