செய்யூர், நவ 15: சித்தாமூர் அருகே மாடு குறுக்கே வந்ததால் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து ஷேர் ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் ஷேர் ஆட்டோவில் பயணம் செய்த 9 பெண்கள் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சித்தாமூர் அடுத்துள்ள நீர்பெயர் கிராமத்தில் இருந்து 9 பெண்கள், நேற்று மாலை 4 மணியளவில் ஷேர் ஆட்டோவில் பெருவேலி கிராமத்தில் நடந்த துக்க நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு ஊர் திரும்பிக்கொண்டிருந்தனர். அவர்கள் வந்த ஷேர் ஆட்டோ கொளத்தூர் கிராமம் அருகே வந்தபோது மாடு ஒன்று சாலையை கடக்க குறுக்கே ஓடி வந்ததாக கூறப்படுகிறது.