ஓரினச்சேர்க்கைக்கு அழைத்து இன்ஜினியரிடம் நகை, பணம் பறிப்பு

பல்லாவரம்,  நவ.15: ஆவடி, கோவில்பதாகை, பொன்னியம்மன் கோவில்  தெருவை சேர்ந்தவர் லோகநாதன் (28). இவர் சென்னையில் உள்ள தனியார் ஐடி  நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக வேலை செய்து வருகிறார்.  இவர் ஓரினச்சேர்க்கையில் ஆர்வம் கொண்டவர் என்று கூறப்படுகிறது. இவர்  தினமும் சென்னையில் உள்ள தனது அலுவலகத்திற்கு ஆவடி அன்னலூர் ரயில்  நிலையத்தில் இருந்து செல்வது வழக்கம். அவ்வாறு செல்லும் போது, இவருக்கு  ஆவடி, காமராஜர் நகர் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் விக்னேஷ்(23), ஆவடி  ஆனந்தன் நகரை சேர்ந்த அருண்குமார் (21) மற்றும் திருமுல்லைவாயல், மணிகண்ட  புரம் பகுதியை சேர்ந்த யாசிம் (19) என்பவர்களுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.  இவர்கள் நான்கு பேரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து ஓரினச் சேர்க்கையில்  ஈடுபடுட்டு வந்துள்ளனர். இந்நிலையில், லோகநாதனிடம் அதிக அளவில் பணம்  புழங்குவதைக் கண்ட விக்னேஷ் உள்ளிட்ட மூன்று பேரும், லோகநாதனை ஏமாற்றி பணம்  பறிக்க திட்டம் தீட்டினர். அதன்படி அவர்கள் 3 பேரும் நேற்று லோகநாதனை  தொடர்பு கொண்டு ஜாலியாக வெளியில் சென்று ஓரினச்சேர்க்கையில் ஈடுபடலாம்  என்று ஆசை வார்த்தை கூறினர். இதையடுத்து லோகநாதன், மூன்று  நண்பர்களையும் அழைத்துக்  கொண்டு வண்டலூருக்கு ஆட்டோவில் புறப்பட்டனர்.

அவர்கள்  வண்டலூர் மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் மாங்காடு அருகே வந்த போது, லோகநாதன்,  விக்னேஷ் உள்ளிட்ட மூன்று பேரிடமும் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட முயன்றார். அப்போது,  அவர்கள் லோகநாதனை கடுமையாக தாக்கி அவர் அணிந்திருந்த செயின், மோதிரம்  உள்ளிட்ட நகைகளையும், அவரது வங்கி ஏடிஎம் கார்டுகள் மற்றும் லோகநாதன்  வைத்திருந்த விலையுயர்ந்த இரண்டு செல்போன்கள், ரூ.20 ஆயிரம் ரொக்கப் பணம்  ஆகியவற்றையும் பறித்துக் கொண்டு, அவரை நடுவழியில் இறக்கி விட்டு மின்னல்  வேகத்தில் தப்பிச் சென்றனர். அதிர்ச்சி அடைந்த லோகநாதன், இதுகுறித்து  மாங்காடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் விரைந்து வந்த  போலீசார் வழக்குப் பதிவு செய்து தப்பியோடிய கும்பலை ஆவடி ரயில்  நிலையம் அருகே வைத்து கைது செய்தனர்.

Related Stories: