பொதட்டூர்பேட்டையில் தொடர் பைக் திருட்டு

பள்ளிப்பட்டு, நவ.15:  பள்ளிப்பட்டு அடுத்த பொதட்டூர்பேட்டை பேரூராட்சி முன்னாள் திமுக தலைவர் ஜெ.எம்.தண்டபாணி. இவர், கடந்த 12ம் தேதி இரவு தனது பைக்கை வீட்டின் வெளியே நிறுத்தியிருந்தார். பின்னர் மறுநாள் காலை பார்த்தபோது அந்த பைக் மாயமாகி இருந்து. இதுகுறித்த புகாரின்பேரில் பொதட்டூர்பேட்டை  போலீசார் வழக்கு பதிவு செய்து பைக்கை திருடி சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

பொதட்டூர்பேட்டை பேரூராட்சியில் கடந்த சில மாதங்களாக வீட்டின் முன் நிறுத்தியிருந்த சுமார் 25க்கும் மேற்பட்ட பைக்குகள் மற்றும் மொபெட்டுகள் திருடப்பட்டுள்ளன. எனவே, இப்பகுதியில் போலீசார் இரவு நேரங்களில் ரோந்து பணிகளில் ஈடுபட்டு, தங்களது வாகனங்களை மீட்பதுடன், சம்பந்தப்பட்ட மர்ம கும்பலை பிடிக்க திருவள்ளூர் மாவட்ட எஸ்பி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.

Related Stories: