திருவள்ளூர், நவ. 15: அரசு பட்டா வழங்கிய இடத்தில் வீடு கட்டித்தரக்கோரி, திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தை நரிக்குறவர்கள் முற்றுகையிட்டனர். திருவள்ளூர் பெரியகுப்பம் நரிக்குறவர்கள் சார்பில், விஜயன் தலைமையில் 100க்கும் மேற்பட்ட நரிக்குறவர்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமாரிடம் கொடுத்த மனுவின் விவரம்: திருவள்ளூர் பெரியகுப்பம் ரயில்வே மேம்பாலத்தின் கீழ், 10 ஆண்டுகளுக்கும் மேலாக கூடாரம் அமைத்து வசித்து வருகிறோம். எங்களுக்கு அதிகத்தூர், புன்னப்பாக்கம் ஆகிய கிராமங்களில் அரசு இடம் ஒதுக்கி பட்டா வழங்கியுள்ளது. ஆனால், இதுவரை வீடுகளை கட்டித்தர எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.