பெண்ணுக்கு மிரட்டல் ஆட்டோ டிரைவர் உள்பட இருவர் மீது வழக்கு

நாகர்கோவில், நவ.15:  நாகர்கோவில் வாத்தியார் விளையை சேர்ந்தவர் செல்லத்தங்கம் (48). இவரது மகன் பிரகாஷ். இவர் அதே பகுதியை சேர்ந்த சுந்தர்ராஜன் என்பவரது ஆட்டோவில் பயணம் செய்ததற்கு பணம் கொடுப்பது சம்மந்தமாக முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில், சம்பவத்தன்று இரவு சுந்தர்ராஜன் மற்றும் ஜெயபிரகாஷ் ஆகிய இருவரும் செல்லத்தங்கத்திற்கு கொலை மிரட்டல் விடுத்ததாக வடசேரி காவல் நிலையத்தில் அவர் புகார் செய்தார். போலீசார் சுந்தர்ராஜன் மற்றும் ஜெயபிரகாஷ் ஆகியோர் மீது பெண்கள் வன்கொடுமை சட்டப்படி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: