ஊத்தங்கரையில் அடிப்படை வசதிகள் கோரி ஆர்ப்பாட்டம்

ஊத்தங்கரை, நவ.14:  கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே மூன்றம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட தளபதி நகருக்கு குடிநீர், தெருவிளக்கு, சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்ற கோரி தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில், சிங்காரப்பேட்டை பஸ் நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு ஒன்றிய தலைவர் ஆறுமுகம் தலைமை வகித்தார். நிர்வாகிகள் ஜெயராமன், பூபதி, ராதாகிருஷ்ணன், கந்தையன், கருணாநிதி, பாபு.மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் சேகர் ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து பேசினார். மாவட்ட தலைவர் தர், மாதையன், கபிலன், நாகராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.  ஆழ்துளை கிணறு அமைத்து சின்டெக்ஸ் தொட்டி கட்டி தர வேண்டும். புதிய மின்விளக்கு கம்பங்கள், தெரு விளக்குகள் அமைக்க வேண்டும். குடியிருப்புகளுக்கு மின் வசதிகள் ஏற்படுத்த வேண்டும். புதியதாக சாலைகள் போட வேண்டும். தளபதி நகர் மக்கள் அனைவருக்கும் தேசிய ஊரக வேலை திட்டத்தில் வேலை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தின்போது வலியுறுத்தப்பட்டது.  

Related Stories: