கழிவுநீர் கால்வாயை தூர்வார கோரிக்கை

கிருஷ்ணகிரி, நவ.14: கிருஷ்ணகிரி அடுத்த துவாரகாபுரியில் உள்ள கழிவுநீர் கால்வாயை தூர்வார வேண்டும் என கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர். அதில் கூறப்பட்டுள்ளதாவது: துவாராகாபுரி கிராமத்தில் உள்ள கழிவுநீர் கால்வாய் மாதக்கணக்கில் தூர்வாரப்படாமல் உள்ளது. பல இடங்களில் கழிவுநீர் தேங்கியுள்ளது. இதனால் கொசு வசிப்பிடமாக மாறிவிட்டது. அவ்வாறு உள்ள கொசுக்களால் பொதுமக்கள், குறிப்பாக குழந்தைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மாணவ, மாணவிகள் மாலை நேரங்களில் படிக்க முடியாமல் தவிக்கின்றனர். இரவில் தூங்கவும் முடிவதில்லை. மேலும் சிலர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, இப்பகுதி மக்களின் நலன் கருதி கழிவுநீர் கால்வாயை தூர்வாருவதுடன், கொசு மருந்து அடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் மருத்துவ முகாம் அமைத்து, அனைவருக்கும் நிலவேம்பு கசாயம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: