பாப்பிரெட்டிப்பட்டி அருகே கிணற்றில் விழுந்து மூதாட்டி பலி

அரூர், நவ.14:  அரூர் அருகே மோட்டூரை சேர்ந்தவர் சென்னப்பன். இவருடைய மனைவி சென்னம்மாள் (65). இவர் சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர். பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த விழுதுப்பட்டியில் உள்ள தம்பி சேகர் வீட்டில் சென்னம்மாள் கடந்த சில நாட்களாக தங்கியுள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் இருந்த சென்னம்மாள், திடீரென மாயமானார். அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதற்கிடையே விழுதுப்பட்டி அருகே விவசாய கிணற்றில் சென்னம்மாள் சடலமாக மிதந்தார்.  இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: