காரிமங்கலம் அருகே உண்டியலை உடைத்து நகை, பணம் திருட்டு

காரிமகங்லம், நவ.14: காரிமங்கலம் அருகே பெருமாள் கோயில் உண்டியலை உடைத்து, மர்ம நபர்கள் பணம், நகைகளை திருடி சென்றது தொடர்பாக  போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். காரிமங்கலம் அருகே ஜோல்லம்பட்டி கிராமத்தில் பெருமாள் கோயில் உள்ளது. இந்த கோயிலில் தினமும் சிறப்பு பூஜைகள் நடப்பது வழக்கம். இதில் பக்தர்கள் திரளாக பங்கேற்று காணிக்கைகளை செலுத்துவர். இந்நிலையில் அக்கோயிலில் நேற்று காலை கோயிலின் பூட்டு உடைக்கப்பட்ட நிலையில் இருந்தது. அப்பகுதி மக்கள், கோயில் நிர்வாகி பெருமாளிடம் தெரிவித்தனர். அவர் கோயிலுக்கு வந்தபோது உண்டியல் உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து, காரிமங்கலம் ேபாலீஸ் ஸ்டேஷனில் பெருமாள் புகார் அளித்தார். அதனடிப்படையில் திருட்டுப் போன நகை, பணம் எவ்வளவு? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: