பாப்பிரெட்டிப்பட்டிக்கு நாளை டிடிவி தினகரன் வருகை

தர்மபுரி, நவ.14: பாப்பிரெட்டிப்பட்டியில் நாளை நடக்கும் உண்ணாவிரத அறப்போராட்டத்தை, டிடிவி தினகரன் முடித்து வைத்து பேசுகிறார்.  தர்மபுரி மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழக செயலாளர் ராஜேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கை: தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி வளர்ச்சிப்பணிகளையும், மக்கள் நலத்திட்டங்களையும் முழுமையாக புறக்கணித்து வரும் அரசை கண்டித்து, உண்ணாவிரத போராட்டம் நாளை (15ம் தேதி) காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் நடக்கிறது. முன்னாள் அமைச்சர், தலைமை நிலைய செயலாளர் பழனியப்பன் தலைமை வகிக்கிறார். ஒன்றிய செயலாளர் கவுதமன் வரவேற்கிறார். தர்மபுரி மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், எம்ஜிஆர் இளைஞரணி இணை செயலாளர் முருகன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொது செயலாளர் டிடிவி தினகரன் எம்எல்ஏ கலந்து கொண்டு உண்ணாவிரதத்தை முடித்து வைத்து பேசுகிறார். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: