அரூரிலிருந்து கம்பைநல்லூர் வழியாக காரிமங்கலம் பகுதிக்கு கூடுதல் பஸ்கள் இயக்க கோரிக்கை

அரூர், நவ.14: அரூரிலிருந்து கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணம், காரிமங்கலம், ஓசூருக்கு  அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த வழியாக  செங்குட்டை, அண்ணாமலைப்பட்டி, நவலை, கம்பைநல்லூர், காரிமங்கலம், திப்பம்பட்டி உள்ளிட்ட ஊர்களுக்கு ஏராளமானோர் வேலை நிமித்தமாக சென்று வருகின்றனர். இந்த  வழியாக மிக குறைந்த அளவிற்கே, பஸ்கள் இயக்கப்படுகிறது. இதனால், மணிக்கணக்கில், பயணிகள் காத்திருக்க ேவண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.அந்த சமயங்களில் அவ்வழியாக வரும் பஸ்களில் கட்டுக்கடங்காத பயணிகளின் கூட்டம் காணப்படுகிறது. படியில் தொங்கியவாறு ஆபத்தான பயணம் செய்ய ேவண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு, அரூர், மொரப்பூரிலிருந்து கம்பைநல்லூர் வழியாக காரிமங்கலத்திற்கு கூடுதல் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க ேவண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: