காலியிடம் நிரப்பக்கோரி அஞ்சல் ஊழியர்கள் தர்ணா

திருச்சி, நவ. 14: திருச்சி அஞ்சல்துறை மண்டல அலுவலகத்தில் காலியிடங்களை நிரப்பக்கோரி அஞ்சல் ஊழியர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். திருச்சி தலைமை தபால் நிலைய அலுவலக வளாகத்தில் அஞ்சல் ஊழியர்கள் கூட்டு போராட்டக்குழு சார்பில் நேற்று காலை 10 மணிக்கு தர்ணா போராட்டம் துவங்கியது. என்எப்பிஇ ேகாட்ட செயலாளர் குணசேகரன், எப்என்பிஓ மண்டல செயலாளர் ஆறுமுகம் ஆகியோர் தலைமை வகித்தனர்.

என்எப்பிஇ மண்டல செயலாளர் கோவிந்தராஜ், கிளை செயலாளர் பிரபாகர், எப்என்பிஓ கோட்ட செயலாளர்கள் வரதநாகராஜன், ரத்தினசாமி உள்பட இரு சங்கத்தையும் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். 1.1.1996 முதல் தபால்காரர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகையை உடனே வழங்க வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். மாற்றுப்பணிக்கு எடுக்கப்பட்ட ஊழியர்களை மீண்டும் ஒப்படைக்க வேண்டும். ஊழியர்கள் மீதான டார்க்கெட் நிர்ப்பந்தத்தை கைவிட வேண்டும். ஊதியம் வழங்குவதில் உள்ள குறை களை களைய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா நடந்து வருகிறது.

Related Stories: