எல்ஐசி முகவர் சங்கம் திருச்சியில் ஆர்ப்பாட்டம்

திருச்சி, நவ.14: எல்ஐசி முகவர்கள் கிளப் உறுப்பினர்களுக்கு வழங்க வேண்டிய மருத்துவ உதவி தொகை தர மறுக்கும் எல்ஐசி நிர்வாகத்தை கண்டித்து அகில இந்திய எல்ஐசி முகவர்கள் சங்கம் சார்பில் தமிழகம் முழுவதும் கிளை அலுவலகங்கள் முன்பு நேற்று மதியம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதே போல ரங்கம் கிளை இந்திய ஆயுள் காப்பீட்டு கழகம் அலுவலகம் முன்பு முகவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு தலைவர் கண்ணையா தலைமை வகித்தார். செயலாளர் சின்னச் சாமி முன்னிலை வகித்தார். பொருளாளர் கோபிநாத் உறுப்பினர்கள் ஆண்ட்ரோஸ், லதா, பத்மாவதி, ராம்குமார், புகழேந்தி, மோகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: