கலெக்டர் தகவல் மணப்பாறையில் வீட்டின் பூட்டை உடைத்து பணம், நகை கொள்ளை

மணப்பாறை, நவ.14: மணப்பாறையில் பெயிண்டர் வீட்டின் பூட்டை உடைத்து 3 பவுன் நகை மற்றும் ரூ.15 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.  மணப்பாறை காட்டுப்பட்டியை சேர்ந்தவர் பாபு, பெயிண்டர். இவருக்கு சொந்தமான வீடு பூமாலைபட்டியில் உள்ளது. அந்த வீட்டில் தாயார் கவுசல்யா (58) என்பவர் மட்டும் தனியாக வசித்து வருகிறார். நேற்று முன்தினம் வீட்டை பூட்டிவிட்டு கவுசல்யா மகளை பார்க்க வெளியூர் சென்றுவிட்டார். இதனையடுத்து தாய் வீட்டிற்கு நேற்று சென்ற பாபு வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பது தெரிந்து அதிர்ச்சியடைந்தார். பின்னர் வீட்டினுள் சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 3 பவுன் நகை மற்றும் ரூ15 ஆயிரம் கொள்ளை போனது தெரியவந்தது.

 இது குறித்து மணப்பாறை போலீசில் பாபு அளித்த புகாரின் பேரில் போலீசார் கொள்ளை போன வீட்டை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டுள்ளனர்.  இது போல, மணப்பாறை கோவிந்தராஜபுரத்தை சேர்ந்த ராஜேஷ்கண்ணா என்பவரது வீட்டில் நேற்று அதிகாலை உள்ளே நுழைந்த மர்ம நபர் ஒருவர் வீட்டில் பையில் இருந்து ஒரு கிராம் மோதிரம் மற்றும் ரூ.400ஐ திருடிவிட்டு செல்லும்போது, சத்தம் கேட்டு சுதாரித்த வீட்டினர் மர்ம நபரை துரத்தியபோது, அந்த நபர் தப்பி ஓடிவிட்டார். இது குறித்தும் மணப்பாறை போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Related Stories: