அளவுக்கு மீறி மது குடித்த துப்புரவு ஊழியர் பலி

திருச்சி, நவ. 14: திருச்சி அரியமங்கலம் வடக்கு உக்கடை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆரோக்கியநாதன் (36). இவர் மாநகராட்சியில் ஒப்பந்த துப்புரவு தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை அதிக போதையில் வீட்டுக்கு வந்தவர் திடீரென மயங்கி விழுந்தார். மனைவி மற்றும் அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்துவிட்டதாக கூறினர். இதையடுத்து உடலை கைப்பற்றிய அரியமங்கலம் போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: