பூனாம்பாளையத்தில் அதிமுக ஆண்டு விழா பொதுக்கூட்டம்

மண்ணச்சநல்லூர், நவ. 14: திருச்சி புறநகர் மாவட்டம் மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி பூனாம்பாளையத்தில் அதிமுக 47வது ஆண்டு துவக்க விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார், திருப்பைஞ்சீலி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கித்தலைவரும், முன்னாள் ஒன்றிய கவுன்சிலருமான அறிவழகன் ஆகியோர் வரவேற்புரை ஆற்றினர். கிளை செயலாளர்கள் கோவிந்தன், நாகராஜ், தங்கேஸ்வரன், சீனிவாசன், அய்யப்பன், கோவிந்தசாமி, பொன்னுசாமி,  திருப்பதி, சங்கர், பெருமாள், தங்கராஜ், ராமசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இக்கூட்டத்தில் மண்ணச்சநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பரமேஸ்வரி முருகன், தலைமை கழக பேச்சாளர் தஞ்சை மதுரபாரதி ஆகியோர் சிறப்புரையாற்றினர். மேலும் பொதுமக்களுக்கு வேட்டி, சேலை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளையும் எம்எல்ஏ வழங்கினார். கூட்டத்தில் எம்ஜிஆர் மன்ற மாவட்ட இணை செயலாளர்கள் பங்க் எம்.செல்வராஜ், டி.சின்னையன், பொதுக்குழு உறுப்பினர் ஆர்.ஜெயராமன், ஒன்றிய அவைத்தலைவர் ராஜகோபால், ஒன்றிய துணை செயலாளர் சித்ராபாலு, ஒன்றிய பொருளாளர் சி.நடராஜன் உள்பட பலரும் கலந்து கொண்டனர். நிறைவாக மண்ணச்சநல்லூர் பேரூராட்சி செயலாளர் துரை.சக்திவேல் நன்றி கூறினார்.

Related Stories: