பண பலத்தை மட்டுமே நம்பியுள்ள அதிமுகவை கூட்டணி பலத்தால் வீழ்த்த வேண்டும்

மணப்பாறை, நவ.14:   பண பலத்தை மட்டுமே நம்பியுள்ள அதிமுகவை, ஒற்றுமையாக செயல்பட்டு கூட்டணி பலத்தால் வீழ்த்த வேண்டும் என்று திமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் கே.என்.நேரு பேசினார்.மணப்பாறை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டம் மணப்பாறையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில்  நடந்தது. கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சரும், திருச்சி மாவட்ட திமுக செயலாளருமான கே.என்.நேரு தலைமை வகித்தார். ஒன்றியச் செயலாளர் ராமசாமி, நகரச் செயலாளர் மைக்கேல்ராஜ் உள்ளிட்டோர் வரவேற்றனர். மாநில துணை பொதுச்செயலாளர் சுப்புலெட்சுமி ஜெகதீசன், இளைஞர் அணி துணைச் செயலாளர் சுபா.சந்திரசேகரன், மாநகர செயலாளர் அன்பழகன், மாவட்ட பொருளாளர் கோவிந்தராஜ், ஒன்றிய செயலாளர்கள் வையம்பட்டி சபியுல்லா, மருங்காபுரி செல்வராஜ் (வடக்கு) சின்னஅடைக்கன் (தெற்கு ) மற்றும் நிர்வாகிகள் விவசாய அணி ராமசாமி, வக்கீல் துரை அழகிரி, முரளி கிருஷ்ணன், இளைஞரணி ஆனந்த், பாலசுப்பிரமணி, மொண்டிபட்டி நாகராஜன், துரை, காசிநாதன், வையம்பட்டி வெங்கடேசன், மினிக் கியூர் செந்தில்குமார், சீனிவாசன்,விஸ்வநாதன் உள்பட கட்சியின் அனைத்து பிரிவு நிர்வாகிகளும் பங்கேற்றனர்.

இதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு பேசுகையில், மணப்பாறை சட்டமன்ற தொகுதி இதுவரை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டதை மாற்றி திமுக போட்டியிட மேலிடத்தில் கேட்டுள்ளோம். அதிமுக பணபலத்தை மட்டுமே நம்பி உள்ளது. ஆனால், திமுகவிடம் கூட்டணி பலம் அதிகமாக உள்ளது. நாம் ஒற்றுமையுடன் செயல்பட்டு அதிமுகவை வீழ்த்தி வெற்றியை ஈட்ட வேண்டும். இவ்வாறு கே.என்.நேரு பேசினார்.   மணப்பாறை நகரம் மற்றும் ஒன்றியம், வையம்பட்டி, மருங்காபுரி ஒன்றிய பகுதிகளிலிருந்து ஏராளமான தொண்டர்கள் கூட்டத்தில் திரளாக கலந்துகொண்டனர்.

Related Stories: