திருத்துறைப்பூண்டியில் நாகை நாடாளுமன்ற தொகுதி அமமுக ஆலோசனை கூட்டம்

திருத்துறைப்பூண்டி, நவ. 14: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக நாகை நாடாளுமன்ற தொகுதி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.மாநில பொருளாளரும், தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளருமான ரெங்கசாமி தலைமை வகித்தார். நகர செயலாளர் தாஜுதீன் வரவேற்றார். அமைப்பு செயலாளர்கள் சிவாராஜமாணிக்கம், குடவாசல் ராஜேந்திரன், மாவட்ட செயலாளர்கள் திருவாரூர் காமராஜ், நாகை தெற்கு சந்திரமோகன், மாநில தேர்தல் பிரிவு துணை செயலாளர் மலர்வேந்தன்  உள்ளிட்டோர் பேசினர். மாவட்ட  மருத்துவர் அணி செயலாளர் டாக்டர் ராஜா மற்றும் ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் டெங்கு, பன்றி, பறவை காய்ச்சல் நோய்களை கட்டுப்படுத்தாததை கண்டித்தும், மறைமுகமாக பேருந்து கட்டணத்தை உயர்த்தியதை கண்டிப்பது, அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் போதிய மருத்துவர்களை நியமிக்காத தமிழக அரசை கண்டிப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. ஒன்றிய செயலாளர் கோபால்ராமன் நன்றி கூறினார்.

Related Stories: