சேதுபாவாசத்திரம், நவ.14: சேதுபாவாசத்திரம் வட்டாரத்தில் தமிழ்நாடு அரசு வேளாண்மை துறை மற்றும் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை சார்பில் பயிர் காப்பீடு செய்வது குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ‘கலாஜதா’ தெருக்கூத்து வாயிலாக விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. அதன்படி பூக்கொல்லையில் விழிப்புணர்வு பிரசார வாகனத்தை வேளாண்மை உதவி இயக்குனர் வித்யா துவக்கி வைத்து பேசுகையில், எதிர்பாராத இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் நஷடத்தை தவிர்க்க விவசாயிகள் உரிய கட்டணத்தை செலுத்தி பயிர் காப்பீடு செய்து பலனடையலாம் என்றார்.