பாபநாசம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிக்கு தூய்மை விருது

பாபநாசம், நவ. 14: ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்திட்டம் சார்பில் 2017-18ம் ஆண்டுக்கு தூய்மை பள்ளிக்கான விருது பாபநாசம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு கிடைத்தது.இதற்காக தஞ்சையில் நடந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் அண்ணாதுரை தலைமை வகித்தார். மாவட்ட அளவில் தூய்மை பள்ளிக்கான விருதை வேளாண் அமைச்சர் துரைக்கண்ணு வழங்கினார். அதை பள்ளி தலைமையாசிரியர் ரமேஷ் பெற்று கொண்டார்.எஸ்பி செந்தில்குமார், மாநிலங்களவை எம்பி வைத்திலிங்கம், எம்பிக்கள் மயிலாடுதுறை பாரதிமோகன், தஞ்சாவூர் பரசுராமன், முதன்மை கல்வி அலுவலர் சுபாஷினி, மாவட்ட உதவி திட்ட அலுவலர் ரமேஷ், மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் கோகுலகிருஷ்ணன் பங்கேற்றனர். விருது பெற்ற பாபநாசம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் ரமேஷை பாபநாசம் பகுதியை சேர்ந்த சக ஆசிரியர்கள் பாராட்டினர்.

Related Stories: