ஓட்டல் உரிமையாளர்களுக்கு டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு கூட்டம்

கும்பகோணம்,நவ.14: தஞ்சை மாவட்டம் கும்பகோணம் நகராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து ஹோட்டல் உரிமையாளர்களுக்கு டெங்கு மற்றும் பன்றி காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு கூட்டம்நடந்தது.நகர்நல அலுவலர் பிரேமா தலைமை வகித்து காய்ச்சல் தடுப்பு குறித்து விளக்கி பேசி அறிவுரை வழங்கினார். கூட்டத்தில் டெங்கு காய்ச்சல் மற்றும் தடுக்கும் வழிமுறைகள், உணவகங்களில் கொசு புழுக்கள் உருவாகாமல் தடுத்து நோயில் இருந்து பாதுகாப்பது குறித்த குறும்படம் திரையிடப்பட்டது.கூட்டத்தில் ஹோட்டல் உரிமையாளர்கள், நகராட்சி துப்புரவு ஆய்வாளர்கள் பாலசுப்பிரமணியன், மணிகண்டன் மற்றும் துப்புரவு மேற்பார்வையாளர், பரப்புரையாளர்கள் மற்றும் தனியார் மய துப்புரவு பணி மேற்கொள்ளும் மேலாளர் மற்றும் அனைத்து மேற்பார்வையாளர்கள் பங்கேற்றனர்.

Related Stories: