ஆர்.எஸ்.மங்கலம், நவ. 14: ஆர்.எஸ்.மங்கலம் அருகே உள்ள ஆனந்தூர் சுற்றுவட்டார பகுதியில் மின் கம்பிகள் மிகவும் தாழ்வாக தொங்குவதால் ஆபத்து ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது இதனை சரிசெய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.ஆர்.எஸ்.மங்கலம் தாலுகாவில் உள்ள செல்லையாபுரம், ஆனந்தூர், பச்சனித்திகோட்டை போன்ற கிராமங்களில் மின் கம்பங்களில் உள்ள மின் கம்பிகள் அறுந்தும், தொய்வு ஏற்பட்டும் தலை தட்டும் உயரத்தில் மிகவும் தாழ்வாக தொங்குகின்றது. இதனால் உயர் சேதம் ஏற்படும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து மின் துறை அதிகாரிகளுக்கு தெரிவித்து இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்ைல என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.