ஆர்.எஸ்.மங்கலம் தாலுகாவில் கைக்கு எட்டும் தூரத்தில் மின் கம்பிகள்

ஆர்.எஸ்.மங்கலம், நவ. 14: ஆர்.எஸ்.மங்கலம் அருகே உள்ள ஆனந்தூர் சுற்றுவட்டார பகுதியில் மின் கம்பிகள் மிகவும் தாழ்வாக தொங்குவதால் ஆபத்து ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது இதனை சரிசெய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.ஆர்.எஸ்.மங்கலம் தாலுகாவில் உள்ள செல்லையாபுரம், ஆனந்தூர், பச்சனித்திகோட்டை போன்ற கிராமங்களில் மின் கம்பங்களில் உள்ள மின் கம்பிகள் அறுந்தும், தொய்வு ஏற்பட்டும் தலை தட்டும் உயரத்தில் மிகவும் தாழ்வாக தொங்குகின்றது. இதனால் உயர் சேதம் ஏற்படும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து மின் துறை அதிகாரிகளுக்கு தெரிவித்து இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்ைல என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதுகுறித்து மாலிக் உசேன் கூறுகையில், ‘எங்கள் கிராமப் பகுதிகளில் ஏராளமான இடங்களில் மின் கம்பிகள் கீழே தாழ்வாக தொங்குகிறது. இதனை சரிசெய்ய வேண்டிய மின்வாரிய அதிகாரியின் கவணத்திற்கு கொண்டு சென்ற பிறகும் இன்று வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது மிகுந்த வேதனை அளிக்கிறது. இது சம்மந்தமாக விரைவில் பொதுமக்கள் சார்பாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் கொடுக்க உள்ளோம்’ என்றார்.

Related Stories: